linoj.do.am

சேவைகள்
CATEGORIES
திரை விமர்சனம்
தமிழ் MP3 பாடல்கள்
MP3 பாடல்கள் கேட்பதற்கு
தமிழ் வானொலி
தமிழ் திரைப்படங்கள்
மொழி மாற்றப்பட்ட திரைப்படங்கள்
கணினி
கவிதைகள்
பெண்கள் உலகம்
சிறுவர் பூங்கா
உடல்நலம்
தமிழ் சினிமா
ஆன்மீகம்
நகைச்சுவை(ங்க...)!
சர்தார்ஜி
குட்டீஸ்
மருத்துவம் & நீதிமன்றம்
பொது
அரசியல்
குடும்பம்
Email Subscribe

பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Enter your email address:

Serch
Statistics
Online Users

Site Friend
linotech.info
ommuruga.fr
இணைப்பு கொடுக்க
linoj.do.am
Code :
இணையத் தமிழ் உலகம் - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotechinfo.com
LinoTechinfo - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotech.info
LinoTech.info - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.
Vote Plz..
Tamil Top Blogs

My Topsites List
கல்வி
கல்விச்சேவை
யாழ். சென்ஜோன்ஸ்
திருகோணமலை இந்து
சாவகச்சேரி இந்து
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
தமிழ் செஸ்
Jaffna Central - Canada
Vembadi Girl's High School
University of Jaffna
cutsa
University of Moratuwa University of Kelaniya
University of Colombo
The Open Uni of SL
Uni of Sri
University of Peradeniya
Jayewardenepura
Main » Articles » தமிழ் சினிமா » திரை விமர்சனம் [ Add new entry ]

மஞ்சள் வெயில் - திரை விமர்சனம்


ஒரே கல்லூரியில் படிப்பவர்கள் பிரசன்னா, சந்தியா. அவர்களை காதலர்களாக பார்க்கின்றனர் சக மாணவர்கள்.
சந்தியா அக்காள் தாரிகாவுக்கு திருமணம் நிச்சயமாகிறது. பிரசன்னாவையும், இதர நண்பர்களையும் திருமணத்துக்கு அழைக்கிறார். சந்தியா அழகில் மயங்கும் மாப்பிள்ளை ஆர்.கே, தாரிகாவுக்கு பதில் சந்தியாவை மணக்க விரும்புகிறார். மின்சார ஷாக் கொடுத்தும் விஷம் தந்தும் தாரிகாவை கொல்ல முயற்சிக்கிறார். அதிலிருந்து தப்புகிறார் தாரிகா. மனமேடையில் தாரிகா சர்க்கரை நோயால் மயக்கமாகி விழ திருமணம் நிற்கிறது. நோயாளி பெண்வேண்டாம் என எதிர்க்கிறார் ஆர்.கே.யின் தாய். தாரிகாவுக்கு பதில் சந்தியாவை கட்டித்தர நிர்ப்பந்திக்கின்றனர். தந்தை நிழல்கள் ரவி சம்மதிக்கிறார்.

அதிரும் சந்தியா பிரசன்னாவுடன் ஊரை விட்டு ஓடுகிறார். எம்.எஸ். பாஸ்கரிடம் அடைக்கலமாகிறார்கள். அவர் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முயற்சிக்க நாங்கள் காதலர்கள் இல்லை, நண்பர்கள் என்று குண்டு தூக்கி போடுகின்றனர்.

பிளாஷ்பேக்கில் பாலா, சந்தியா காதல் விரிகிறது. பாலாவை தேடி அலைகிறார் பிரசன்னா. அவரை கண்டு பிடிக்கும் போது வில்லன்களால் குத்தப்பட்டு கோமா நிலைக்கு போகிறார். பிரசன்னாவை அந்த நிலையில் விட்டு பாலாவுடன் போக மறுக்கிறார் சந்தியா. பிறகு நடப்பது கிளைமாக்ஸ்...

நட்பு, காதலுக்குள், கதையை புகுத்தி மனதை வருடியபடி நகர்த்துகிறார் இயக்குனர் வசீகரன். பிரசன்னா, சந்தியா நட்பு அழுத்தம். இருவரும் காதலர்கள் இல்லை என மறுப்பது திருப்பம். பாலாவுடன் பிரசன்னா மோதுவது... சந்தியா, அவரை விரும்புவது தெரிந்து கோவில் மணி அடித்து இருவரையும் சேர்ப்பது வலுவானவை.

காதலன் பாலாவை தேடி அலைவது வில்லனிடம் இருந்து அவரை காப்பாற்றி விட்டு வேனில் அடிபட்டு குற்றுயிராய் கிடப்பது என மனதை தொடுகிறார். சந்தியா துறு துறுவென வருகிறார்.

பாலாவுடன் காதல் வயப்படுவது கவிதை.... காதலனை தேடி பிரசன்னா படும் கஷ்டங்கள் அறிந்து காதலே வேண்டாம் ஊருக்கு போகிறேன் என்று அழும் போது நடிப்பில் மெருகு.... பாலாவும் நடிப்பில் போட்டி போட்டு உயர்கிறார். ஆர்.கே. வில்லத்தனம் மிரட்டல். பேராசிரியராக இருந்து ஆட்டோ டிரைவராக மாறும் எம்.எஸ்.பாஸ்கர் சிரிக்க வைக்கிறார். பரத்வாஜ் இசையில் பாடல்கள் இனிமை.. கவியரசு ஒளிப்பதிவில் ஊட்டி அழகு.

நட்பு, காதல் உணர்வுகளை இன்னும் உயிரோட்டமாக செதுக்கி இருக்கலாம்.
Category: திரை விமர்சனம் | Added by: linoj (2009-06-27)
Views: 864 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Login ]