| 
				
			 என்னை வெப்கொம்மில்விடாமல் பார்க்கிறாயே
 ஏன் வீட்டில் யாருமே
 இல்லையா?
 ************************ ஹையோ ! செல்லம் நீதிமிரா பேசும் போதே
 நினைத்தேன் இவ்வளவு
 அழகாய் இருப்பாய் என்று
 அடிக் கள்ளி
 ************************* கண்டதும் காதலில் எனக்குநம்பிக்கை இல்லாமல் போனது
 சாட்டில் உன்னை சந்தித்ததால்
 *************************** உலகமே என்னை ஒதுக்கிவைத்தாலும்ஆன்லைனில் நீ நின்றால் போதும்
 உலகத்தையே ஒதுக்கி வைப்பேன்
 உனக்கு முன்னாலே
 ************************** நாம்சாட்டில் பேசும்போது நமக்கே
 தெரியாமல் பல கவிதைகள்
 இறந்து போகிறது இனியாவது
 நாம் பேசுவதை பதிந்துவை நீ
 கிழவி ஆகும் போது படித்துக்
 காட்ட வேண்டும்
 ***************************** என் கணனி என்னவோநான் தன்னை பார்பதாய்
 நினைத்து ரொம்ப
 வெக்கப்படுகிறது நீ
 ஆன்லைனில் வந்துவிட்டாயா
 என அடிக்கடி நான் பார்க்கும் போது
 **************************** என் மெசெஞ்சரை கேட்டுப் பார்என் காதலை உன்னிடம் சொல்ல
 வந்து எத்தனை தடவை உனக்கு
 அனுப்பாமல் அழித்த கவிதையை
 ****************************** என் அம்மா ஊருக்கே சொல்கிறாஎன் மகனுக்கு கணனியில் எல்லாம்
 தெரியும் என்று அவாக்கு எப்படி தெரியும்
 எனக்கு உன்கூட சாட் பண்ண மட்டும்தான்
 தெரியும் என்று
 |