Main » 
2009 » பங்குனி » 13 » இனியவளே…! [9]
|  | 
| 
				
			 இனியவளே..என் காதலை சொல்ல ஒன்றுக்கு
 மூன்று பூக்கள் பறித்து வந்தேன்
 ஏதேனும் ஒன்றாவது வாடாமல்
 இருக்குமென்று
 என்ன அதிசயம் பூவானஉனைக் கண்டவுடன் எல்லா
 பூக்களும் சிரிக்கிறது
 ***************************அழகான பூவாக
 இருந்தாலும்
 பூக்கடையில் பூ
 வாங்க பிடிக்காது
 அவர்கள் யாரைநினைத்து பறித்தார்களோ
 யாருக்கு தெரியும்
 *************************தயவு செய்து
 என்னை கவிஞன்
 என்று எப்போதும்
 ஏற்றுக்கொள்ளாதே
 ஏனெனில்
 ஒவ்வொரு தடவையும்நான் உண்மை சொல்லும்
 போதும் உன்னிடம் உண்மை
 சொல்லவாவென கேட்டு விட்டு
 சொல்ல வேண்டி வரும்
 *********************** என் நம்பிக்கைதான் நீ என்று சொன்ன பின்னும் உன் வாழ்க்கையை தர மறுத்தால் நம்பிக்கைதான் வாழ்க்கை என்பது பொய்த்து விடுமல்லவா நீயே சொல்……. | 
| Views: 690 | 
Added by: m_linoj
 | Rating: 0.0/0 |