| 
				
			 ஆதாம்ஏவாள் சுவைத்த
 பாவக்கனி
 காதல்!
 * துளிர் துயிலும்மழைத்துளி பருகவரும்
 சின்னஞ்சிறு சிட்டுக்குருவியாய்
 என்னிருதயம்
 உனைத் தேடி
 வரும் அந்நாளில்
 காத்திரு காதலோடு!
 * கசப்பு மருந்தருந்தியகுழந்தையின் முகமாய்
 இதயம்;
 உன்னை காணா நாட்களில்!
 * ஒரு நாள்மழையோடு;
 மற்றொருநாள்
 மலரோடு;
 இன்னொரு நாள்
 இசையோடு என்று
 ஒவ்வொரு சந்திப்பின் பிறகும்
 ஒவ்வொன்றோடு திரும்புகின்றேன்;
 பொத்தி வைக்க இடமில்லாமல் போகும் நாளில்
 மொத்தமாக கடத்திச் செல்வேன் உன்னை!
 * உலர்ந்து வெளிறிஉடையும் நிலையிலிருக்கிறது
 ரோஜா இதழ்கள்;
 பனி கூட உதிராமல்
 பத்திரமாய் இருக்கிறது
 அதை நீ கை சேர்த்த கணம்!
 * குளித்து வரும்உன்னில் வழியும்
 நீர்த்துளிகள் நினைவூட்டுகின்றன;
 மழை தூரிகை
 சன்னல் கண்ணாடியில்
 வரையும் ஓவியங்களை!
 * தேநீரில்கரைந்திட காத்திருக்கும்
 சர்க்கரைக் கட்டியென
 உன்னுள் கலந்திட
 படைக்கப்பட்டவள் நான்!
 * உன்வளையல் சிணுங்கும் ஓசைகளையும்
 கொலுசு கொஞ்சும் ஒலிகளையும்
 பத்திரப்படுத்துகிறேன்
 என் கவிதைகளுக்கான இசைக்குறிப்புகளாய்!
 * உன்னைப் போலவேஅழகாயிருக்கிறது
 நம் காதலும்!
 * நீ உறைய - இதயம்கொத்திக் கொத்தி
 கூடு அமைக்கிறது
 காதல் குருவி!
 * அதிகாலை எழுந்துசோம்பல் முறிக்கிறாய்;
 எங்கோ மெல்ல
 மொட்டு வெடிக்கிறது
 ஓர் தாமரை!
 * கோபமாய்நீ முகம் திருப்பிடும்
 கணத்தில்
 சட்டென நிகழ்ந்தே விடுகிறது
 என் வானில்
 ஓர் சந்திர கிரகணம்!
 * பார்வையற்ற மனிதனின்கைத்தடியாய்
 நீ இல்லா என் வாழ்வில்
 நின் நினைவுக்குறிப்புகள்!
 * எப்படி பத்திரப்படுத்துவதெனத் தெரியவில்லைஉன் இதழ்கள்
 என் மேல் வரைந்த
 ஈர ஓவியங்களை!
 |