| 
				
			 நீயும் நனைந்தாய்நானும் நனைந்தேன்
 நம்மோடு சேர்ந்து
 தானும் நனைந்து
 நடுங்கியது மழை!
 * அடித்து பெய்யும்மழையில் கரைகிறது
 ஏதாவது ஒரு காதலின்
 கண்ணீர்!
 * மழைமழையை மட்டும் கொணர்வதில்லை
 சில நேரங்களில்
 சில தேவதைகளையும்!
 * நனைந்து சுகித்திருந்தஉன்னை அம்மா
 இழுத்துப் போக
 சோவென அழத்தொடங்கியது
 மழை!
 * சைவமான என்னைஅசைவமாக்கிப் போகிறது
 உன் மேல் விழும்
 மழைத்துளி!
 * மழைஉன் அருகாமையில்
 அருமையாகவும்
 தூரத்தில்
 அவஸ்தையாகவும்!
 * மழை வேண்டிவருபவர்களையெல்லாம்
 விரட்டியடித்தபடி இருக்கிறான்
 கடவுள்!
 படிப்பிற்காக வெளியூரிலிருக்கும்
 உன்னை ஊருக்குள்
 அழைத்து வரும்படி!
 * ஊரிலிருந்துநீ வருவாயென
 நேற்றே வந்து
 வாசல் தெளித்துப் போயிருந்தது
 மழை!
 * இன்றும் விடாமல்பெய்தபடி
 நீ
 என்னைக் குடைக்குள்
 அழைத்துக் கொண்ட
 அவ்விரவின் மழை!
 * என் கவிதைகளுக்குஎன்ன மேன்மை கிடைத்திடக்கூடும்
 உன் கையால்
 மழை நாளில்
 காகித கப்பல்களாவதைவிட!
 * மழை நின்றகணத்தின் இலைப்போல்
 முகமெல்லாம்
 திட்டுத்திட்டாய்
 உன் முத்தங்கள்!
 * சிறுமழைபெருமழை
 எதுவும்
 மழையை மட்டும் கொண்டுவருவதில்லை
 உன் நினைவுகளையும்!
 * நம் உலகில்நான்
 நீ
 பின், நமக்கான மழை!
 * நீ மழையாகநான் துளியாக
 மெல்ல பொழியட்டும்
 காதல்!
 * முகிலின் நிராகரிப்புமழை!
 உன்னின் நிராகரிப்பு
 என் கண்ணீர்!
 * குழைந்தைகளுடன்நீ நனைந்திருக்க
 குதூகலமாய்
 பொழியத் தொடங்கியது மழை!
 * மின்னல்மழையின் கிறுக்கலென்றால்
 உன் விரல்
 என்மேல் வரைந்ததை
 என்னென்பது?!
 * மழைமழையை மட்டும் குறிக்காது
 காதலையும்!
 * நீ பெண்ணாகவும்நான் ஆணாகவும் ஆனதின் இரகசியம்
 துலங்கியது
 ஓர் மழையிரவில்!
 * நீபெண்ணின் ஓர்துளி
 நான்
 ஆணின் ஓர்துளி
 வா,
 காதல் பொழிவோம்!
 * என் வேர்கள்காத்திருக்கின்றன
 உன்
 மழைக்காக!
 * மழைவானின் ஓர்துளி
 நீ
 அழகின் ஓர்துளி!
 |