linoj.do.am

சேவைகள்
CATEGORIES
Software [8]
Wallpapers [3]
Photoshop [2]
Games [3]
செய்திகள் [16]
கணினி
கவிதைகள்
பெண்கள் உலகம்
சிறுவர் பூங்கா
உடல்நலம்
தமிழ் சினிமா
ஆன்மீகம்
நகைச்சுவை(ங்க...)!
சர்தார்ஜி
குட்டீஸ்
மருத்துவம் & நீதிமன்றம்
பொது
அரசியல்
குடும்பம்
Email Subscribe

பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Enter your email address:

Serch
Statistics
Online Users

Site Friend
linotech.info
ommuruga.fr
இணைப்பு கொடுக்க
linoj.do.am
Code :
இணையத் தமிழ் உலகம் - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotechinfo.com
LinoTechinfo - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.

linotech.info
LinoTech.info - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.
Vote Plz..
Tamil Top Blogs

My Topsites List
கல்வி
கல்விச்சேவை
யாழ். சென்ஜோன்ஸ்
திருகோணமலை இந்து
சாவகச்சேரி இந்து
ஹாட்லி கல்லூரி
கொக்குவில் இந்து
தமிழ் செஸ்
Jaffna Central - Canada
Vembadi Girl's High School
University of Jaffna
cutsa
University of Moratuwa University of Kelaniya
University of Colombo
The Open Uni of SL
Uni of Sri
University of Peradeniya
Jayewardenepura
புதுவகை மின்சாரம்

எதிர்காலத்தில் தண்ணீர்தான் நிலக்கரியாக இருக்கும் என்று கனவுகண்டார் பிரெஞ்சு விஞ்ஞானக்கதை எழுத்தாளர் ஜுல்ஸ் வெர்னெ. இந்தக் கனவு உதித்தது 1874ம் ஆண்டில். இப்போது ஒரு நூற்றண்டுக்கும் மேலாக காலம் கடந்த பிறகு, அந்தக் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் நெதர்லாந்து மற்றும் நார்வே நாட்டு விஞ்ஞானிகள். கடல்தண்ணீரையும், நதி நீரையும் கலந்து மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய கருவிகளை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.

 

இப்படியொரு அறிவியல் சிந்தனை எப்படி உருவானது? நதி நீர் கடலில் சென்று விழும்போது, உப்புச்செறிவின் வித்தியாசம் காரணமாக ஏராளமாக எரிசக்தி உருவெடுக்கிறது. இயற்கை இலவசமாகத் தரும் இந்த எரிசக்தியை பயன்படுத்திக் கொள்ளலாம். விஞ்ஞானிகள் தீர்மானித்து விட்டனர். இது நீடித்து நிலைத்திருக்கக்கூடிய எரிசக்தி மூலம், இது வெப்பவாயுவை வெளியேற்றுவதில்லை என்பதால் சுற்றுச்சூழல் மாசுபடும் பிரச்சினையும் இல்லை.

நார்வே விஞ்ஞானிகளும் நெதர்லாந்து விஞ்ஞானிகள் இரண்டு எவ்வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றனர். நார்வே விஞ்ஞானிகள் பயன்படுத்துவது ஒருவகையான சவ்வூடு பரவும் osmosis முறை, இதில் தண்ணீர் அழுத்தத்தின் மூலம் சவ்வுப்படலங்களுக்கு இடையே பாய்ச்சப்படுகிறது. இது, வென்னீரில் hot dog என்று மேற்கத்திய உணவுப்பண்டத்தைப் போடுவது போல. hot dog மீது வென்னீர் பட்டதும் அதன் தோல் சவ்வு போல மாறி, வெளியேறும் உட்பு நீரை விட அதிகநீரை உள்ளே இழுக்கிறது. இதனால் hot dogற்குள் அழுத்தம் அதிகரித்து அது வெடிக்கிறது. அப்போது எரிசக்தி உண்டாகிறது. இதன் பின்னணியில் உள்ள கோட்பாடு என்னவென்றால் ஆற்றின் நன்னீரும், கடலின் உப்பு நீரும் சவ்வுப்படலம் போன்ற ஒரு சாதனத்திற்குள் செலுத்தப்படுகின்றன. ஆற்று நீர் படலம் வழியாக, அழுத்தம் உண்டாக்கப்பட்ட கடல் நீருடன் கலந்து, சாதனத்திற்கு வெளியே வந்து விழும் போது, அது நீர்மின் டர்பைனுக்குள் விடப்பட்டு அதில் மின்சாரம் உற்பத்தியாகிறது.

 

நெதர்லாந்து விஞ்ஞானிகள் முரையைப் பின்பற்றுகிறார்கள். இவற்றில் நார்வே முறை தான் மிகவும் முன்னேறியது என்று கூறப்படுகிறது. ஆனால், இதற்கு அதிகம் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மலிவான, செயல்திறன் மிக்க சவ்வுப்படலங்கள் கிடைப்பதுதான் பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்த வகையில் மலிவாக மின்சாரம் உற்பத்தி செய்ய இன்னும் ஐந்தாண்டுகளாவது ஆகும் என்கிறார்கள்.